65 அடி உயரமான பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து

ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு வேளையில் 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில் மழை பெய்ததன் காரணமாக சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. ஓட்டுநர் உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. கனமழையைத் … Continue reading 65 அடி உயரமான பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து